1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 8 ஜூன் 2020 (21:09 IST)

அதிபருக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் மக்கள் !

சீனாவில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸால் பல நாடுகள் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில் பிரேசில் நாட்டில் 6,91,962 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37,312 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர், இதனால் கொரொனாவால்  அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக பிரேசில் உள்ளது.

இந்நிலையில், கொரொனா பாதிப்புகள் அதிகரிக்க அதிபர் பொல்செனரோ காட்டிய அலட்சியம்தான் காரணம் என மக்கள் குற்றச்சாட்டுகள் கூறிவந்த நிலையில்., மக்கள் அதிபருக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.