தொடர்புடைய செய்திகள்
- கொரோனா தடுப்பூசியில் முக்கிய பங்கு வகித்தவர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு..!
- இன்று மீண்டும் உயிர்தெழுமா சந்திரயான் 3? இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்
- விக்ரம் லேண்டரை மீண்டும் மேலே எழுப்பி தரையிறக்கிய இஸ்ரோ: விஞ்ஞானிகள் சாதனை..!
- ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றி.. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த அன்புமணி..!
- வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா எல்1 விண்கலம்.. விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..!
இயற்பியலுக்கான நோபல் பரிசு.. 3 நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு..!
2023ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மூவரும் அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என ஆறு துறைகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதல் நாளான நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளான பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகியோர்கள் பெறுகின்றனர்.
இந்த மூவருக்கும் நோபல் பரிசுடன், 8 கோடி ரூபாய்க்கான ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
