1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 23 டிசம்பர் 2021 (08:51 IST)

ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு: பிரிட்டனில் கோரத்தாண்டமாடும் கொரோனா!

பிரிட்டனில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சம் பேர்களுக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்த நிலையில் படிப்படியாக குறைந்தது என்பதும் அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டதால் மீண்டும் இயல்பு நிலை திரும்பியது என்பதும் தெரிந்ததே.
 
ஆனால் அமெரிக்கா பிரிட்டன் உள்பட ஒருசில நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது பிரிட்டனில் இன்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 172 பேர்களுக்கு கொரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 140 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் ஊரடங்கு உள்பட சில கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என அந்நாட்டின் அறிவியல் ஆலோசனை குழு எச்சரித்துள்ளதால் பிரிட்டனில் விரைவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.