தொடர்புடைய செய்திகள்
- நார்வே நாட்டு இளவரசியின் கணவர் தற்கொலை! – சோகத்தில் நார்வே!
- ஆசிய லெவன் vs உலக லெவன் – பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் விளையாடுவார்களா ?
- குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு; அமெரிக்காவில் பேரணி நடத்திய இந்தியர்கள்
- குளியலறையில் வழுக்கி விழுந்த அதிபர்! – பழைய நினைவுகளை இழந்த சம்பவம்!
- சூரிய கிரகணத்தை கண்டு ரசிக்கும் மக்கள்..
100 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்! – கட்டிடத்தில் மோதி சிதறி விபத்து!
கஜகஸ்தானில் விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கஜகஸ்தான் நாட்டு அல்மத்தி நகரிலிருந்து தலிநகர் நுர்சுல்தானுக்கு விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. 95 பயணிகள் மற்றும் 5 சிப்பந்திகளுடன் புறப்பட்ட விமானம் விமான நிலையம் அருகே இருந்த கட்டிடத்தில் மோதி சிதறியது. உடனடியாக அங்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. விமானம் புறப்பட்ட போதே போதிய உயரத்தை எட்ட முடியாமல் கட்டிடத்தில் மோதியிருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கஜகஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
