1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 டிசம்பர் 2019 (09:34 IST)

100 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்! – கட்டிடத்தில் மோதி சிதறி விபத்து!

கஜகஸ்தானில் விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஜகஸ்தான் நாட்டு அல்மத்தி நகரிலிருந்து தலிநகர் நுர்சுல்தானுக்கு விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. 95 பயணிகள் மற்றும் 5 சிப்பந்திகளுடன் புறப்பட்ட விமானம் விமான நிலையம் அருகே இருந்த கட்டிடத்தில் மோதி சிதறியது. உடனடியாக அங்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. விமானம் புறப்பட்ட போதே போதிய உயரத்தை எட்ட முடியாமல் கட்டிடத்தில் மோதியிருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கஜகஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.