1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 4 அக்டோபர் 2022 (16:27 IST)

ராஜ ராஜ சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? கருணாஸ் கேள்வி

karunas
ராஜ ராஜ சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா?  என கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
ராஜ ராஜ சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது; இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள்.இந்தியா என்பது ஒரு தேசமில்லை.அது பல தேசங்களின் ஒன்றியம்
 
ஆரியம் எப்போதும் ஒன்றை எதிர்க்கும். அது முடியாது என்று தெரிந்துவிட்டால் அதை தனதாக்கிக் கொள்ளும்; அப்படித்தான் எல்லாவற்றையும் தனக்கானதாகவே மாற்றிக்கொண்டது.இப்போதும் மாற்றிக் கொண்டிருக்கிறது
 
ராஜ ராஜ சோழனை இந்து என்று மாற்றநினைப்பது மட்டுமா நடந்தது?; தமிழை சமஸ்கிருதத்திலிருந்து தோன்றிய மொழி என்றார்கள். சிந்துவெளி நாகரிகமான தமிழர் நாகரிகத்தில் இடம்பெற்ற காளையை,குதிரையாக திரித்தார்கள்”
 
"முப்பாட்டன் முருகனை சுப்ரமணியனாக மாற்றினார்கள்; தஞ்சை பெரிய கோயிலை பிரகதீஸ்வரர் ஆலயம் என்று மாற்றினார்கள்; எங்கெல்லாம், எதையெல்லாம் காவியாக்க முடியுமோ அதையெல்லாம் மாற்ற முற்படுவார்கள்"
 

Edited by Siva