1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 ஜூலை 2021 (11:43 IST)

51 வயதிலும் முரட்டு சிங்கிள்; சுயஇன்பமே வாழ்க்கை! – மயிரைழையில் தப்பித்த ஜப்பானியர்!

ஜப்பானில் 51 வயதான ஒருவர் தொடர்ந்து சுய இன்பம் செய்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் காப்பாற்றப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.

ஜப்பானை சேர்ந்த 51 வயது நபர் ஒருவர் திருமணமே செய்து கொள்ளாமல் தொடர்ந்து சுய இன்பம் மட்டுமே செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் அதிகரிக்க ஒருநாளைக்கு பலமுறை சுய இன்பம் செய்து வந்துள்ளார்.

தொடர்ந்து இவ்வாறு அவர் செய்து வந்த நிலையில் சமீப காலமாக அடிக்கடி மயக்கம், வாந்தி வருவதாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்ததில் தொடர் சுய இன்பத்தால் அவருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதுடன், பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளதை கண்டறிந்த டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றியுள்ளனர்.