செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (20:04 IST)

உக்ரைனுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்: ஜப்பான் அறிவிப்பு

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடந்த 4 நாட்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றன என்பதும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பல நாடுகளிலிருந்து  உக்ரைன் நாட்டிற்கு நிதி உதவிகள் குறைந்து வரும் நிலையில் ஜப்பான் நாடு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது 
 
மேலும் வேறு எந்த உதவி தேவை என்றாலும் உக்ரைன் நாட்டிற்கு செய்ய தயாராக இருப்பதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது