1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (20:11 IST)

கொரோனா வைரஸால் ஹூண்டாய்க்கு வந்த சோதனை..

கொரோனா வைரஸால் பிரபல கார் நிறுவனமான ஹூண்டாய் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கிட்டதட்ட 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவில் மட்டுமே 2,800 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஈரான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உயிரிழப்புகளும் அதிகமாகி வருகின்றது.

இந்நிலையில் தென் கொரியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்று மட்டுமே 256 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நோயாளிகளின் எண்ணிக்கை 2022 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் பிரபல கார் நிறுவனமான ஹூண்டாய் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.