வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (14:34 IST)

பெண்களை கற்பழித்த கணவன் : வீடியோ எடுத்து மிரட்டிய மனைவி ! பகீர் சம்பவம்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முசாஃபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்வி லோஹன் என்பவர் இரு பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை சஞ்வி லோஹனின் மனைவி வீடியோ எடுத்துவைத்துள்ளார்.
சில நாட்கள் கழித்து சஞ்சி அந்த பெண்களை மிரட்டி மீண்டும் பலாத்காரம் செய்ய முயற்சிமேற்கொண்டுள்ளான். 
 
அந்த இரு இளம் பெண்கள் இதற்குப் பயந்துள்ளனர்.ஆனால், தன் கணவன் ஏற்கனவே இரு பெண்களை வன்புணர்வு செய்யும் வீடியோவை காட்டிய  மனைவி ரீதா அவர்களை மிரட்டியுள்ளார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த இரண்டு பெண்கள் அவகளது உறவினர்களுடன் இதுபற்றி கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
இதனையடுத்து சஞ்வி ஹோலனும் அவரது மனைவி ரீதாவையும் போலீஸார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல் வெளியாகிறது.