தொடர்புடைய செய்திகள்
- திரிஷா மற்றும் ஜெயம் ரவியின் ட்விட்டர் ப்ளூ டிக் காலி!... என்ன காரணம்?
- டுவிட்டரில் இனி 10,000 கேரக்டர்கள் வரை ட்வீட் செய்யலாம்: புதிய அம்சம் அறிமுகம்!
- ட்விட்டர் நிறுவனத்தை விற்பனை செய்ய போகிறாரா எலான் மஸ்க்..?
- சந்தா செலுத்தாத கணக்குகளின் ப்ளூடிக் அகற்றப்படும்: கெடு தேதி அறிவித்த எலான் மஸ்க்..!
- உலகக் கோடீஸ்வரர்கள் ஏழையாக இருந்தால்? வைரலாகும் 'AI 'சேட்டை புகைப்படங்கள்!
ட்விட்டரை அடுத்து புதிய 'AI' தொழில்நுட்பத்தில் களமிறங்கும் எலான் மஸ்க்! OpenAI-க்கு போட்டியா?
சமூக வலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் கொடுத்து வாங்கி தன் வசப்படுத்திக் கொண்ட தொழில் அதிபர் எலான் மஸ்க், அடுத்ததாக 'AI' தொழில்நுட்பத்தில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் 'AI' தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் பரவி வருகிறது என்பதும் எதிர்காலமே 'AI' தொழில்நுட்பம் தான் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க், 'AI' துறையில் நுழைய திட்டமிட்டு இருப்பதாகவும் இதுக்காக புதிய ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்கும் பணியில் அவர் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே உலகம் முழுவதும் OpenAI நிறுவனத்திற்கு பெரும் வரவேற்பு இருக்கும் நிலையில் இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய போட்டியாக எலான் மஸ்க் நிறுவனம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து எலான்மஸ்க் கூறிய போது நாம் பிரபஞ்சத்தின் ஒரு சுவாரசியமான பகுதியில் இருக்கிறோம் என்றும் பிரபஞ்சத்தை புரிந்து கொள்வதில் அக்கறை கொண்ட ஒரு 'தொழில்நுட்பமாக எங்களது 'AI' இருக்கும் என்றும் பாதுகாப்பிற்கான சிறந்த பாதையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
