தொடர்புடைய செய்திகள்
- ஐஸ்வர்யா ராஜேஷ் -ன் ’சொப்பன சுந்தரி ’பட டிரைலர் ரிலிஸ்
- ஐஐஎம் மையத்தில் சண்டை போட்ட 2 ராட்சத பல்லிகள் !
- ’உத்வேகமூட்டும் மனிதர்’’ அமித்ஷாவை புகழ்ந்த இங்கிலாந்து முன்னாள் வீரர்!
- 3வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 73 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
- இண்டெர்நெட்டை அதிகம் முடக்கிய நாடு! – உக்ரைனை மிஞ்சிய இந்தியா!
உலக நாடுகளில் மக்கள் தொகை சரியும் எலான் மஸ்க் கணிப்பு
உலக நாடுகளில் மக்கள் தொகை சரியும் என்று டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியவருமான எலான் மஸ்க் எப்போதும் தொலை நோக்குப் பார்வையுடன் செயல்படுபவர்.
இவர், ஜப்பான் மற்றும் சீனாவைப் போல் உலகளவில் மக்கள் தொகை பெருமளவு சரியும் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில்,ஜப்பான் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், 2022 ஆம் ஆண்டு வரலாற்றின் இல்லாத வகையில் பிறப்பு விகிதம் கடந்தாண்டை ஒப்பிடும்போது 5.1 % குறைந்திருப்பதாக கூறியது.
இதுகுறித்து டுவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க், ஜப்பான் நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்திருப்பதும் இறப்பு விகிதம் 2 மடங்கு அதிகரித்திருப்பதும், மக்கள் தொகை சரிவைக் காட்டுகிறது. இதேபோல் உலகம் முழுவதும் பிறப்பு விகிதம் சரிவு ஏற்படும் என்று எசரித்துள்ளார்.
மேலும், சீனாவில், 1 குழந்தைக்கொள்கை தற்போது இல்லை; 6 வருடங்களுக்கு முன்பே 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது அரசு, ஆனாலும் இனி வரும் காலங்களில், ஒவ்வொரு தலைமுறையிலும், 40% மக்கள் தொகையை சீனா இழக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
