தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்காவை தாக்க இருக்கும் மற்றுமொரு பெருந்துயர் - 520 ஆண்டுகளுக்குப் பின் நடக்க இருக்கும் அவலம்
- ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேல் பலி: இதிலும் அமெரிக்காதான் முதலிடம்!
- ஏப்ரல் 20 முதல் மீண்டும் சுங்கக் கட்டணம்! மோட்டார் வாகன காங்கிரஸ் அதிருப்தி!
- ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு! – 14 ஆயிரத்தை நெருங்கிய இந்தியா!
- கேரளாவில் கொரோனாவால் கண்டறியப்பட்ட முதல் குடும்பத்தின் அனைவரும் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவால் நுரையீரல் மட்டுமல்ல… இந்த உறுப்பும் பாதிக்குமாம்! அதிர்ச்சித் தகவல்!
கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் அதிகளவில் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் பிரச்சனையால அவதிப்படுகின்றனர். இப்போது இந்த வைரஸால் நுரையீரல் மட்டுமல்லாது சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதுபற்றி சர்வதேச சிறுநீரக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘5 முதல் 50 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு சிறுநீரகத்தில் 'அக்கியுட் கிட்னி இன்ஜுரி' எனும் கடுமையானக் காயம் ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் சிறுநீரில் கூடுதலான அளவு ரத்தத்தையும் புரதத்தையும் கசிய செய்கிறது’ எனத் தெரிவித்துள்ளது.
இந்த தகவலானது பொதுமக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
