1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. China warns Indian army to kill

இந்திய ராணுவத்தினரை கொன்று குவிப்போம்: சீனா மிரட்டல்!!

இந்திய
எல்லை பிரச்சனை காரணமாக இந்தியா சீனா நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் எல்லையில் இரு தரப்பினரும் ராணுவ பலத்தை அதிகரித்துள்ளனர்.


 
 
இந்தியா எல்லையில் உள்ள தனது ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என சீனா மிரட்டி வருகிறது. மேலும், எல்லையில் போர் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
 
மேலும், இந்தியா பலவீனமானது சீனா வலிமையானது, இந்திய அரசியல்வாதிகள் இதை உணர்ந்து கொள்ளாது இருக்கின்றனர் என தெரிவித்து வருகின்றனர்.
 
இந்தியாவின் உயிர் மற்றும் உடமைகளுக்கு பெரும் சேதத்தை சீனா ஏற்படுத்தும் என மிரட்டியுள்ளனர். மேலும், இந்திய ராணுவ வீரர்களுக்கு சீன அரசு மூன்று வாய்ப்புகளை கொடுத்துள்ளது.
 
அவை, ராணுவத்தை திரும்ப பெறுவது, சிறைபிடிப்பு அல்லது கொல்லப்படுவது. மேலும், இந்திய ராணுவத்தை வலுக்கட்டாயமாக வெளியேற்றவும், அவர்களை சிறைபிடிக்கவும், பிரச்சனை வெடித்தால் அவர்களை கொல்லவும் அதிகாரம் உள்ளது என எச்சரித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
சீறிய சசிகலாவிடம் சவால் விட்ட ரூபா: சிறையில் நடந்த காரசார வாக்குவாதம்!