1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 18 நவம்பர் 2021 (15:36 IST)

ஆஃப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு...9 பேர் பலி!

சமீபத்தில் அமெரிக்கப் படைகள் ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேறின. இதையடுத்து தாலீபான்கள் அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினர்.

இதனால் அந்நாட்டிலுள்ள மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று  ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்  சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில், 9 பேர் பலியாகினர் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளானர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய பயங்கரவாதக்குழு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்  வெளியாகிறது.