1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 12 ஜூன் 2020 (22:45 IST)

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு…

ஆப்கானிஸ்தன் நாட்டில் உள்ள ஒரு மசூதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமையின் போது, பயங்கர  சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இந்த மசூதியின் இமாம் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அரசிற்கும் தாலிபன் பயங்கரவாதிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்க அரசு தொடங்கியது. இதற்கு முக்கிய பங்காற்றி வந்த 4 இமாம்கள் மீது ஐஎஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.