தொடர்புடைய செய்திகள்
- பதவியேற்று ஜோ பிடன் நடத்திய முதல் தாக்குதல்! – சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை!
- பாகிஸ்தானில் இருந்து சிரியாவின் ஐ.எஸ். அமைப்புக்கு அதி நவீன முறையில் செல்லும் நிதி
- சிரியா பேருந்து மீது திடீர் தாக்குதல்: 28 பேர் பலி - இறந்தவர்கள் சிப்பாய்கள் என தகவல்
- சிரியாவில் மீண்டும் தொடங்குகிறதா போர்? - ரஷ்ய வான் தாக்குதலில் 78 பேர் பலி
- லெபனான்: ரஃபீக் ஹரிரி படுகொலை வழக்கில் ஒருவர் குற்றவாளி என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு
மீண்டும் சிரியாவின் அதிபராகிறார் பஷார் அல் அசாத்
சிரியாவின் அதிபர் தேர்தல் நான்காவது முறையாக வெற்றி பெற்று பஷார்அல்அசாத் மீண்டும் அந்நாட்டின் அதிபராகிறார்.
பதிவான 78.6 சதவீத வாக்குகளில் அசாத் 95.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஹமூடாசபாக் நேரலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அசாத்தை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா சலோம் அப்துல்லா மற்றும் மகமோத்அகமத் மாரி ஆகிய இருவரும் முறையே 1.5% மற்றும் 3.3% வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இது நியாயமாக நடத்தப்பட்ட தேர்தல் இல்லை என்று தெரிவித்துள்ளன. ஆனால் வாக்களிக்க வந்த சிரியாவின் அதிபர் அசாத், மேற்கத்திய நாடுகளின் கூற்றை யாரும் கருத்தில் கொள்ளவில்லை என தெரிவித்தார்.
கடந்த பத்து வருடங்களாக நடக்கும் உள்நாட்டு போரில் நிலைகுலைந்து நிற்கிறது சிரியா. ஜனநாயகத்துக்கு எதிரான அமைதியான போராட்டத்தை மோசமான படைகளை கொண்டு அதிபர் அசாத் ஒடுக்கியதற்கு எதிராக அங்கு போர் தொடங்கியது.
