தொடர்புடைய செய்திகள்
- எல்லா இசங்களும் சாதிவெறிக்கு எதிராக திண்டாடுகின்றன – பா ரஞ்சித் வேதனை!
- பெண்களுக்கு நாப்கின் கொடுங்கள் – மகளிரணி நிர்வாகிகளிடம் வேண்டுகோள் வைத்த கனிமொழி!
- கை குழந்தையாக அம்மா மடியில் நயன்தாரா... அன்னையர் தின வாழ்த்து!
- இந்தியாவில் 64ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: பெரும் பரபரப்பு
- ஏர்-இந்தியா ஊழியர்களுக்கும் கொரோனா: வெளிநாட்டு இந்தியர்களை அழைத்து வருவதில் சிக்கலா?
சிறை கைதிகளையும் விட்டு வைக்காத கொரோனா? – குழப்பத்தில் அதிகாரிகள்!
கொரோனா வைரஸ் பாதிப்பினால் அமெரிக்கா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள சிறை கைதிகளையும் கொரோனா தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் முழுவதும் வீரியமாக பரவி வரும் கொரோனாவால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் கொரோனா பாதிப்பால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாண சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லம்போக் சிறைச்சாலையில் உள்ள 792 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல டெர்மின்சல் தீவில் உள்ள மத்திய சிறைச்சாலையிலும் 644 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
சிறைகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அதிகாரிகளிடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மட்டுமல்லாமல் 11 சிறை அதிகாரிகளுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
