தொடர்புடைய செய்திகள்
- குழந்தை குடியேறிகள்: பைடன் நிர்வாகத்தில் தடுப்பு முகாம்களின் முதல் படங்கள் - புதிய சர்ச்சை
- பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிவு
- குடையுடன் விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடி: அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு
- பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.. ஆனால்..? – அமெரிக்கா கட்டுப்பாட்டுடன் அனுமதி!
- இன்று சர்வதேச சைகை மொழி தினம்!
குடியேறிகளை வெளியேற்றும் அமெரிக்கா
கரீபிய நாடான ஹைட்டியில் இருந்து அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி குடியேறியவர்கள், ஹைத்திக்கு மீண்டும் கொண்டு வந்துவிடப்பட்டனர்.
போர்ட்டா ப்ரின்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவர்களை அழைத்து வந்த ஜெட் விமானம் மீண்டும் கிளம்பியபோது, சிலர் மீண்டும் விமானத்தில் என்ற முயற்சித்தனர். சிலர் அந்த விமானம் மீது தங்கள் காலணிகளை வீசினர்.
டெக்ஸாஸின் எல்லையோர நகரம் ஒன்றில் இருந்து அமெரிக்காவுக்குள் புலம்பெயர்ந்தவர்களை விமானம் மூலம் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா கடந்த வாரம் தொடங்கியது.
அமெரிக்காவினுள் நுழைய அமெரிக்க - மெக்சிகோ எல்லைப்பகுதி ஒன்றில் சுமார் 13,000 குடியேறிகள் காத்திருக்கின்றனர். கொலம்பியா - பனாமா எல்லையிலும் அமெரிக்காவில் குடியேற விரும்பும் பல்லாயிரம் பேர் சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
