1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: வியாழன், 31 அக்டோபர் 2019 (14:15 IST)

டுவிட்டரில் ’அந்த விளம்பரங்களுக்கு’ தடை ! டுவிட்டர் நிறுவனம் அதிரடி

இன்றைய உலகில் , இளைஞர்கள் சோறு - தண்ணீர் இல்லமால் கூட இருந்து விடுவார்கள். ஆனால், செல்போனில்  இணையதளம் மற்றும்  சமூக வலைதளங்கள் இல்லாமல் மட்டும், இருக்கவே மாட்டார்கள். இந்நிலையில் சமூக வலைதளமாக டுவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிக்க டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சமூக வலைதளமாக டுவிட்டரை பல கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இதன் வாயிலாக   பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் மற்றும் தவறான தகவல்கள்  பரப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகிறது. எனவே இதைத்தடுக்க உலகில் உள்ள சைபர்கிரைம் போலீசார்  தீவிர முயற்சி செய்துவருகின்றனர்.
 
இந்நிலையில், அரசியல் குறித்த விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.இது குறித்து டுவிட்டர் நிறுவன தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி கூறிதாவது :
 
முற்றிலும் தவறான தகவல்கள் மற்றும்  போலியான தகவல்கள் ஆகியவற்றால் வரும் சிக்கல்களை தீர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தில் புதிய கொள்கைகள் குறித்த விவரங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும். 

அதில்,  அரசியல் குறித்த தகவல்களால் பிரச்சனை எழ அபாயம் உள்ளது என்பதால்,அரசியல் விவரங்கள் மற்றும் வேட்பாளர்கள் பதிவிடும் அரசியல் குறித்த விளம்பரங்கள் தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.