1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (11:37 IST)

மலையில் இருந்து பாறைகள் சரிவு… படகு சவாரி செய்த 8 பயணிகள் மரணம்!

பிரேசில் நாட்டில் உள்ள சுற்றுலா தளம் ஒன்றில் மலை முகட்டில் இருந்த பாறைகள் பெயர்ந்து விழுந்ததால் 8 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கெராய்ஸ் மாகாணத்தில் உள்ள அருவியில் சுற்றுலா பயணிகள் படகுகளில் சவாரி செய்துகொண்டிருந்தனர். அப்போது மலைமுகட்டில் இருந்த 3 பாறைகள் பெயர்ந்து கீழே விழுந்தன. இதில் படகுகளில் சவாரி செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 பேரை காணவில்லை என்றும் சொல்லப்படுகிறது.