1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (11:41 IST)

ஆப்கன் அரசு இருப்பு வைத்துள்ள 28,000 கோடி முடக்கம்!

ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றியிருப்பதை அடுத்து ஆப்கன் அரசு இருப்பு வைத்துள்ள சுமார் 28,000 கோடி ரூபாயை ஐ.எம்.எப். முடக்கியுள்ளது.  

 
சர்வதேச நாணய நிதியத்தில் ஆப்கன் அரசு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்பு வரை 440 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பீட்டில் சுமார் 28,000 கோடி ரூபாய் இருப்பு வைத்திருந்தது. ஆப்கன் தற்போது தாலிபான்கள் வசமாகியிருக்கும் நிலையில் இந்த நிதியை தாலிபான்கள் கைப்பற்றக்கூடும் என்பதால் ஐ.எம்.எப். இந்த நிதியை முடக்கியுள்ளது.