ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (12:39 IST)

ஸ்ரீமதி மரணம் குறித்து 2 தோழிகள் ரகசிய வாக்குமூலம்: நீதிமன்றத்தில் பரபரப்பு!

court
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இந்த மரணம் குறித்து அவருடைய இரண்டு தோழிகள் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் கொடுத்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை ஸ்ரீமதி என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார்
 
இதுகுறித்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் மாணவியின் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகள் குறித்து ஆய்வு செய்து புதுவை ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை தாக்கல் செய்துள்ளது
 
இந்த நிலையில் மாணவி ஸ்ரீமதியின் நெருங்கிய தோழிகள் இருவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்திருப்பதாகவும், இதில் பல திடுக்கிடும் தகவல்கள் இருக்கலாம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது