1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: சனி, 5 மே 2018 (06:40 IST)

டி20 போட்டி - புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா

ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இந்திய அளவில் அதிக சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான டி-20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாபை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் எடுத்தது. இதனால் 175 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.
 
தொடக்க ஆட்டக்காரர் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
இப்போட்டியில்  ரோகித் சர்மா 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். அவர் 2 சிக்ஸர்களையும் அடித்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்தார். அதேசமயம் இந்திய அளவில் அதிக டி20 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.