1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (09:25 IST)

பட ரிலீஸன்று விக்னேஷ் சிவன் & நயன்தாரா சென்ற ஊர்! வைரல் புகைப்படம்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலில் உள்ளனர். விரைவில் அவர்கள் திருமணம் நடக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இருவரும் இப்போது தங்கள் படங்களில் பிஸியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்திருக்கும் காமெடித் திரைப்படமான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிக்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி சென்று வழிபட்டுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பகிர அது வேகமாகப் பரவி வருகிறது.