23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகர் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஹரி, கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தின் நாயகனாக நடித்தவர் பிரசாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஹரி இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம், பிரசாந்தின் 55-ஆவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று பிரசாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, ஹரி இயக்கத்தில் அவர் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தின் நாயகியாக தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதுமட்டுமின்றி இன்னொரு பிரபல நடிகரும் இந்த படத்தில் இரண்டாவது நாயகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படம் குறித்த கூடுதல் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva