1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 26 நவம்பர் 2023 (09:59 IST)

நடிகை வனிதாவை நள்ளிரவில் தாக்கிய மர்ம மனிதர்கள்.. பிரதீப் ஆதரவாளர்களா?

நடிகை வனிதாவை நள்ளிரவில் திடீரென சிலர் தாக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகைகளின் நடிகை வனிதா நேற்று நள்ளிரவில் தனது காரில் வீட்டின் முன் இறங்கிய போது திடீரென அவர் முன் தோன்றிய மர்ம நபர்கள் அவரது முகத்தில் தாக்கியதாகவும் ரெட்கார்ட் கொடுப்பியா என்று இளக்காரமாக சிரித்ததாகவும் வனிதா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த நபர்களின் முகங்களை பார்க்க முடியவில்லை என்றாலும் அவர்கள் சிரித்த சிரிப்பு தனக்கு பயத்தை காட்டியதாகவும் தான் வலியால் துடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக தனது சகோதரியை வரவழைத்து அவரது வீட்டில் முதலுதவி எடுத்துக் கொண்டதாகவும் அதன் பின்னர் தன்னுடைய வீட்டுக்கு சென்றதாகவும் வனிதா தெரிவித்துள்ளார்.  

வனிதாவை தாக்கியவர்கள் பிரதீப் ஆதரவாளர்களாக இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதீப் வெளியேற வ்அனிதாவின் மகள் ஜோதிகாவும் ரெட் கார்டு காட்டியதால் மர்மநபர்கள் அவரை தாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வனிதா இதுவரை காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva