1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2019 (07:56 IST)

நாமினேஷனில் சிக்கினார் வனிதா! வெளியேற்ற தயாராகும் மக்கள்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது மற்றும் நாமினேஷன் படலம் நடைபெற்றும். நேற்று அபிராமி புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக நாமினேஷன் படலம் நடந்தது. இதில் யார் யாரை நாமினேட் செய்தார்கள் என்பதை கீழே பார்ப்போம்
 
சாக்சி: மதுமிதா, சரவணன்
ஷெரின்: மதுமிதா, மீராமிதுன்
ரேஷ்மா: சரவணன், மதுமிதா
வனிதா: மதுமிதா, சரவணன்
முகின்: வனிதா, மீராமிதுன்
கவின்: வனிதா, மீராமிதுன்
லாஸ்லியா: மோகன் வைத்யா, வனிதா
சாண்டி: வனிதா, மீராமிதுன்
சரவணன்: மோகன் வைத்யா, வனிதா
சேரன்: மீரா மிதுன், வனிதா
மீராமிதுன்: மதுமிதா, லாஸ்லியா
மோகன் வைத்யா: மதுமிதா, சரவணன்
தர்ஷன்: வனிதா, மீராமிதுன்
மதுமிதா: சாக்சி, ஷெரின்
அபிராமி: மீராமிதுன், மதுமிதா
 
கடைசியில் மதுமிதா, மோகன் வைத்யா, சரவணன், வனிதா மற்றும் மீராமிதுன் ஆகியோர் எவிக்சன் பட்டியலில் இருப்பதாக பிக்பாஸ் அறிவித்தார். பிக்பாஸ் வீட்டில் உள்ள 15 பேர்களில் 7 பேர்கள் வனிதாவையும், மீராமிதுனையும் நாமினேட் செய்துள்ளனர். 
 
பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு இவர்கள் இருவர் தான் காரணம் என்பதால் இருவரில் ஒருவர் இந்த வாரமும், இன்னொருவர் அடுத்த வாரமும் வெளியேற்றப்பட்டால் பிக்பாஸ் வீடு கிட்டத்தட்ட அமைதியாகிவிடும் என்றே தெரிகிறது, இந்த வாரம் வெளியேறப்போவது யார்? என்பதை வரும் ஞாயிறு வரை பொறுத்திருந்து பார்ப்போம்