தொடர்புடைய செய்திகள்
- ’சீயான் 60’ படத்தில் இணைந்த ஸ்டண்ட் இயக்குனர்!
- மாநாடு படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தொடக்கம்!
- மஞ்சள் படையை இராஜபாளையத்தில் இறக்கிவிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
- ”மண் அள்ளுங்க.. நான் பாத்துக்கறேன்!” – ஓவராய் பேசிய செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையம் வழக்கு
- விக்ரம்மை விஜய்க்கு வில்லனாக்குகிறாரா லோகேஷ்? லோகேஷ் முடிவு!
பாலா படத்தில் நடிக்கப் போகும் மூன்று கதாநாயகர்கள்!
இயக்குனர் பாலா இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க ஆர்யா, அதர்வா மற்றும் விஷால் ஆகியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
இயக்குனர் பாலா தன் நண்பர் விக்ரம்முக்காக அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தை வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால் அந்த படம் விக்ரம்முக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் திருப்தி இல்லாததால் அந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என முடிவெடுத்தனர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு படம் முழுவதுமாக எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் வேறு இயக்குனரால் எடுக்கப்பட்டது இல்லை. சீனியர் இயக்குனரான பாலாவுக்கு இது மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையத்தில் தனது அடுத்த படத்தை எப்படியாவது வெற்றி பெற வைக்கவேண்டும் என பாலா கடுமையாக உழைத்து வருகிறார்.
அவரின் அடுத்த கதையில் மூன்று கதாநாயகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். ஏற்கனவே பாலாவின் படத்தில் நடித்த விஷால், ஆர்யா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
