1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (23:01 IST)

நாகசைதன்யாவை பின்தொடர்வதை நிறுத்திய சமந்தா!

நட்சத்திர தம்பதிகளான சமந்தா மற்றும்  நாகசைதன்யா ஆகியோரின் விவாகரத்திற்குப் பின் சில மாதங்கள் கடந்து விட்ட நிலையில், சமந்தா, நாகசைதய்னாவை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான நாகர்ஜுனாவின் மகனான நாகசைதன்யாவிற்கும், நடிகை சமந்தாவிற்கு சில ஆண்டுகள் முன்னதாக திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் நாகசைதன்யா – சமந்தா தம்பதியினர் தங்கள் விவாகரத்தை அறிவித்தது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி சமந்தா, நாகார்ஜுனாவை குற்றம் சாட்டி பல விவாதங்கள் சர்ச்சைகள் ஊடகங்களில் பேசப்பட்டன.

இந்நிலையில், நடிகை சமந்தா தற்போது விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும்,  முன்னணி  நடிகர்களின் படங்களிலும் நடித்து  வருகிறார்.

விவகாரத்திற்பின் பின் தனது முன்னான் கணவர் நாக சைதன்யாவை இன்ஸ்டாம் கிராம் பக்கத்தில் ஃபாலோ செய்து வந்த சமந்தா, திடீரென்று அவரை ஃபாலோ செய்வதை நிறுத்தியுள்ளார்.