வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 7 மே 2025 (11:24 IST)

மேடையில் கண்கலங்குவது ஏன்?... சமந்தா விளக்கம்!

மேடையில் கண்கலங்குவது ஏன்?... சமந்தா விளக்கம்!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.  தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளில் விவாகரத்துப் பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை.

சமீபகாலமாக அவர் நடித்த ‘குஷி’ மற்றும் ‘சகுந்தலம்’ ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்னர்.  தாய்மொழியான தமிழில் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு பிறகு வேறு எந்த புதிய படத்திலும் அவர் கமிட்டாகவில்லை.

இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு அதில் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் சமீபகாலமாக மேடையில் கண்களை துடைத்துக் கொள்வது எமோஷனல் ஆகி இல்லை. அதிக வெளிச்சத்தைப் பார்த்தால் என் கண்கள் சென்சிட்டிவ்வாகி கண்ணீர் வந்துவிடுகிறது. நான் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.