வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 8 மே 2023 (13:47 IST)

’கேப்டன் மில்லர்’ படக்குழு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன்..!

விதிமுறைகளை மீறி தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படக்குழு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்து செல்ல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நீர்நிலைகளில் நடைபெற்றது. 
 
இது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் துரைமுருகன் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். நீர்நிலைகளை ஆக்கிரமித்து கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடத்த யார் அனுமதி கொடுத்தது என்பது குறித்து உரிய விசாரணை எடுக்கப்படும் என்றும் விசாரணைக்கு பின்னர் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Siva