ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (19:09 IST)

குழந்தை பெற்ற பின்பே திருமணம்: பிரபல நடிகை பதில்

நடிகை ரேஷ்மி கவுதம் திருமணம் குறித்து தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.


 
திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழும் கலாச்சாரம்  இப்போது இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. 
 
தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகை ரேஷ்மி கவுதம். இவர் தமிழில் சாந்தனுக்கு ஜோடியாக கண்டேன் படத்தில் நடித்துள்ளார். அவர் அவ்வபோது டிவிட்டரில் தனது ரசிகர்களிடம் உரையாடி வருகிறார்.
 
சமீபத்தில் ஒரு ரசிகர் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ரேஷ்மி ‘நான் முதலில் ஒரு குழந்தை பெற்றுக்கொள்வேன் அதன் பின்பே திருமணம் செய்வேன். ஆனால், அதற்கு இன்னும் காலமாகும்” என அந்த ரசிகருக்கு ஷாக் கொடுத்துள்ளார்.