செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 10 ஜூன் 2021 (20:55 IST)

எனது முதல் பட ஹீரோவுடன் மீண்டும் நடிக்க விரும்புகிறேன்: கஸ்தூரி

நான் நடித்த முதல் பட ஹீரோவுடன் மீண்டும் இணைந்து நடிக்க விரும்புகிறேன் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். மேலும் நடிகை கஸ்தூரி அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்
 
நடிகை கஸ்தூரி தமிழில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்  பல படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் தெலுங்கிலும் அவர் ஒரு சில படங்கள் நடித்துள்ளார். அவர் தெலுங்கில் அவர் நடித்த முதல் திரைப்படம் நிப்பு ராவா. 
 
இந்த படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எனது முதல் தெலுங்கு படத்தின் ஹீரோவான பாலகிருஷ்ணா அவர்களின் படத்தில் மீண்டும் நடிக்க தான் ஆசைப்படுவதாக டுவிட் ஒன்றாஇ கஸ்தூரி பதிவு செய்துள்ளார். இந்த டுவிட்டில் அவர் பாலகிருஷ்ணா அவர்களுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்