வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:05 IST)

ஒருவருடன் பேசவில்லை எனில் உறவு முறிந்துவிடும் – இயக்குநர் செல்வராகவன்

புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே. போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் செல்வராகவன்.

இந்நிலையில் இவரிடம் ஒரு ரசிகர், கடந்த காலம் திரும்பக் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியை கேட்டார்.

இதற்குப் பதிலளித்த செல்வராகவன், எந்தக் கவலையும் இல்லாமல் தூங்கிப் போன பொழுதைப் கேட்பேன் எனவும், அவள் என்னைக் கடந்து போகையில் உரவும் விழிகளின் தாக்கம் கேட்பேன் என்று சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.

மேலும் ஒருவருடன் பேசவில்லை எனில் உறவு முறிந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
இவரது இயக்கத்தில் எச்.ஜே., சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை படமும், சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி படமும் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.