செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (20:58 IST)

தனது கருத்துக்கு மன்னிப்பு கோரிய இயக்குநர் பாக்கியராஜ்

bakiyaraj
கே பாக்யராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என டிசம்பர் 3'  இயக்கம் தெரிவித்த  நிலையில் தனது கருத்துக்கு பாக்கியராஜ்  மன்னிப்பு கோரியுள்ளார்.

அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்துவது ஒரு போக்காக மாறிவிட்டது என டிசம்பர் 3' இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்திவிட்டு அதன் பிறகு வாய் தவறி வந்து விட்டது என்றும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்றும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கே பாக்யராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிசம்பர் 3' இயக்கம் வலியுறுத்தியது,.

நடிகர் பாக்யராஜின் பேச்சிற்கு விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்ற கருத்திற்கு பாக்யராஜ் மன்னிப்பு கோரினார்.