1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2021 (13:39 IST)

இப்படியே ஆம்பள யார்னு ஆராய்ச்சி பண்ணிட்டே இருங்க ஷிவானி கப் அடிச்சுட்டு போக போகுது!

இன்று வெளியாகினமுதலாவது ப்ரோமோவில் புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் போட்டியாளர்கள் எல்லோரும் ஓடிவந்து buzzer அழுத்திவிட்டு பாடலின் பல்லவியை பாடவேண்டும். இதில் வழக்கம் போலவே யார் முதலில் அழுத்தியது என்பதில் சண்டை வந்துவிட்டது.
 
கேபி நான் தான் அழுத்தினேன் என கூறி போட்டியிட்டு பாடல் பாடிவிட்டார். உடனே ரம்யா ரியாக்ஸனை பார்க்கணுமே... எல்லோரும் ஆரி ஆரி என கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் பிக்பாஸ் திடீரென ஷிவானிக்கு டைட்டில் கொடுத்துவிட்டு அவரை ஒரு நல்ல சீரியலில் கோழி அமுக்குவது போன்று அமுக்குவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளது என ஆடியன்ஸ் யூகிக்க துவங்கியுள்ளனர்.
 
இந்நிலையில் தற்ப்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் ஆரி மற்றும் பாலாவுக்கு இடையில் செம சண்டை வந்துவிட்டது. ஆரியும் மரியாதை இல்லாமல் வாடா போடா என திட்டுவது.. நீ ஆம்பளயான்னு கேட்பதும் நீ ஆம்பல பையன் தானே என்று கேட்பதும் மோசமான இழிவு வார்த்தைகள். ஆரியின் வார்த்தைகள் தான் பாலாவை பல முறை கெட்டவனாக காட்டியுள்ளது. இது போன்ற வார்த்தைகள் விமர்சனத்திற்கு உட்பட்டதாக பார்க்கப்படுவதால் ஆரியை ஓவர் டேக் செய்துவிட்டு ஷிவானி டைட்டில் வெல்ல நிறைய வாய்ப்புகள் உள்ளது.