1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2021 (11:19 IST)

என்னது டைட்டில் வெல்லப்போவது ஷிவானியா? அப்படியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை!

பிக்பாஸ் சீசன் 4 ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் ஜெயிக்கப்போவது ஆரி தான் என பெரும்பாலான ஆடியன்ஸ் மனக்கணக்கு போட்டுவிட்டதால் யாரும் ஜெயிக்கப்போவது யார் என்பது குறித்து திட்டமிட்டே பார்ப்பதில்லை. மாறாக விக்ஷனில் இருந்து யார் வெளியேறுவார்கள் என்பதை காண தான் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 
 
ஆனால், நிகழ்ச்சியின் இறுதியில் என்ன நடக்கும் என்பது பிக்பாஸிற்கு மட்டுமே தெரியும். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதலாவது ப்ரோமோவில் புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் போட்டியாளர்கள் எல்லோரும் ஓடிவந்து buzzer அழுத்திவிட்டு பாடலின் பல்லவியை பாடவேண்டும். இதில் வழக்கம் போலவே யார் முதலில் அழுத்தியது என்பதில் சண்டை வந்துவிட்டது. 
 
கேபி நான் தான் அழுத்தினேன் என கூறி போட்டியிட்டு பாடல் பாடிவிட்டார். உடனே ரம்யா ரியாக்ஸனை பார்க்கணுமே... எல்லோரும் ஆரி ஆரி என கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் பிக்பாஸ் திடீரென ஷிவானிக்கு டைட்டில் கொடுத்துவிட்டு அவரை ஒரு நல்ல சீரியலில் கோழி அமுக்குவது போன்று அமுக்குவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளது என ஆடியன்ஸ் யூகிக்க துவங்கியுள்ளனர்.