1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (10:25 IST)

நடிகையையும் அவர் தாயையும் படுக்கைக்கு அழைத்ததை ஒத்துக் கொண்ட நடிகர் - இவரா இப்படி ?

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விநாயகன் பாலியல் வழக்கில் இரண்டாண்டு வரை சிறை செல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக  இருந்து வருபவர் நடிகர் விநாயகன்.  மலையாளத்தில் கம்மாட்டிப்பாடம் உள்ளிட்ட சில முக்கியமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஷால் நடிப்பில் உருவான திமிரு மற்றும் தனுஷின் மரியான் ஆகியப் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இப்போது விக்ரம்மின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பிரபல மாடலான மிருதுளா தேவி இவர் மீது பாலியல்  குற்றச்சாட்டை கூறியிருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள விநாயகத்தை தொடர்பு கொண்டபோது, தன்னிடமும் தனது தாயிடமும் ஆபாசமாகப் பேசி படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்தார். இந்த புகார் சம்மந்தமாக அவர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளியில் வந்திருக்கிறார்.

இந்நிலையில் விநாயகன் தன் மீதான குற்றச்சாட்டை ஒத்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அவருக்கு ஒரு வருடம்  முதல் இரண்டு வருடம் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.