செவ்வாய், 2 ஜூலை 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 அக்டோபர் 2021 (18:33 IST)

143 இலங்கை நெருங்கி வரும் வங்கதேசம்: மே.இ.தீவுக்கு அதிர்ச்சி தருமா?

இன்று நடைபெற்று வரும் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி கொடுத்த 143 என்ற இலக்கை வங்கதேசம் நெருங்கி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இன்றைய போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்றது அடுத்து அந்த அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பூரன் 40 ரன்களும் சேஸ் 39 ரன்களும் எடுத்தனர்
 
இந்த நிலையில் 143 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் வங்கதேச அணி சற்று முன் வரை 11 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 54 பந்துகளில் 78 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் அந்த அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா வங்கதேசம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்