1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (20:00 IST)

36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு பதக்கம்!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இருந்து இரண்டு பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளதால் இந்திய பேட்மிட்டன் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர் 
 
 
இன்று நடைபெற்ற பெண்கள் பிரிவு காலிறுதி போட்டியில் தவான் வீராங்கனையை எதிர்கொண்ட இந்தியாவின் பிவி சிந்து முதல் செட்டில் பின் வாங்கினாலும் அடுத்த இரண்டு செட்டுகளை கைப்பற்றி தைவான் வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்துவிற்கு ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது 
 
 
இதேபோல் ஆடவர் பிரிவில் இந்தியாவின்  சாய் பிரனீத், இந்தோனேஷியா வீரரை 24-22, 21-14 என்ற நேர் செட்டில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதனால் ஆண்கள் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரிலும் ஒரு பதக்கம் இந்தியாவுக்கு கிடைப்பது உறுதியாகி உள்ளது. கடந்த 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஆண்கள் பிரிவில் இந்தியாவிற்கும் பதக்கம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது எனவே தற்போது 36 ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்கள் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க உள்ளது