1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 29 ஆகஸ்ட் 2020 (15:43 IST)

ஐபிஎல் அதிகாரப்பூர்வ பாட்னரான அன்அகாடமி – பிசிசிஐ அறிவிப்பு!

ஐபிஎல் தொடர் 2020ன் அதிகாரப்பூர்வ பார்டனராக அன்அகாடமி நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 15ம் தேதி லடாக் பகுதியில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் எல்லையோரத்தில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இந்திய அரசு கூறியது. ஆனால், சீனத் தரப்பில் இருந்து அவர்களுக்கு ஏற்பட்ட சேதாரம் குறித்து அதிகாரபூர்வத் தகவல் ஏதும் இல்லை. இந்த சம்பவத்தை அடுத்து இரு தரப்பும் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டுகின்றன. தங்கள் பகுதியில் எதிராளி ஊடுருவியதாக இரு தரப்பும் புகார் கூறுகின்றன.

இதையடுத்து விவோ நிறுவனம் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இந்நிலையில் இப்போது பெங்லளூருவைச் சேர்ந்த அன் அகாடமி என்ற நிறுவனம் ஒப்பந்தம் ஆகியுள்ளது. இதைத் தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது.