1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (16:01 IST)

ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிய வீரர்! கடைசி நேரத்தில் டிவிஸ்ட்!

ஐபிஎல் போட்டிகளுக்காக அனைத்து அணி வீரர்களும் துபாய் சென்று வீரர்கள் தங்கியுள்ள நிலையில் இப்போது கே கே ஆர் அணியில் இருந்து ஒரு வீரர் விலகியுள்ளார்.

செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடக்க உள்ளன. இதற்காக 8 அணியைச் சேர்ந்த வீரர்களும் துபாய்க்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் ஹாரி கர்னி விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். 

தோள் பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருப்பதால் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.