வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (12:04 IST)

நாடு திரும்பும் 2 ஆஸ்திரேலியா வீரர்கள்: ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

நாடு திரும்பும் 2 ஆஸ்திரேலியா வீரர்கள்:
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் நிலைமை கட்டுக்கடங்காமல் உள்ளது 
 
இதனை அடுத்து தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியா தங்கள் நாட்டின் 2 வீரர்களை நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது 
 
பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள ஆடம் ஸாம்பா மற்றும் கேன் வில்லியம்ஸ் ஆகிய இருவரும் ஐபிஎல் போட்டி தொடரில் இருந்து விலகிக் கொள்வார்கள் என்றும் அவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் பெங்களூர் அணிக்கு பின்னடைவு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
 
இந்தியாவில் புறநா கொரொனா அதிகரித்து வருவதால் வீரர்களின் பாதுகாப்பை கருதி திரும்ப அழைத்துக் கொள்வதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.