செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (08:43 IST)

குடும்பம்தான் முக்கியம் …. ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய தமிழக வீரர்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இப்போது 3 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் அது மே மாத மத்தியில் மேலும் அதிகமாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் ‘நாளை முதல் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன். கொரோனாவுக்கு எதிராக எனது குடும்பத்தினர் கடினமாக போராடி வருகின்றனர். இந்த கடினமான நேரத்தில் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். எல்லாம் நல்ல படியாக முடிந்தால் மீண்டும் அணியில் இணைவேன்’ எனக் கூறியுள்ளார்.