1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 18 டிசம்பர் 2021 (22:32 IST)

டெஸ்ட் தொடர்: பயிற்சியில் முதல் ஷெஷனை முடித்த இந்திய அணி.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி இன்று முதல் தங்களின் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.
 

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவை சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் தற்போது ஒமிகிரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து இந்திய அணிக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்ல், இந்தப் போட்டிக்கு ஆயத்தமாகும் வகையில் இந்திய அணி வீரங்கள் தங்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். இந்தப் பயிற்சியின் முதல் ஷெஷனை முடித்த இந்திய வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கேப்டன் கோலி கூ ஆப்பில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.