1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 அக்டோபர் 2020 (12:17 IST)

கடந்த ஆண்டு சிராஜை ரசிகர்கள் அதிகமாக திட்டினார்கள்… இப்போது ஆண்டு நிருபித்துவிட்டார்! கோலி புகழாரம்!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்களை சாய்த்த நிலையில் அவரைப் பாராட்டியுள்ளார் கோலி.

அனைவரும் அதிசயப்படும் வகையில் உள்ளது இந்த ஆண்டு ஆர்சிபி வீரர்களின் ஆட்டம். புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்த்தில் உள்ள ஆர்சிபி பிளே ஆஃப் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தான் வீசிய நான்கு ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அதிலும் தனது முதல் இரண்டு ஓவர்களுமே விக்கெட்களையும் எடுத்தும் ரன்கள் கொடுக்காமல் மெய்டனும் செய்தார். இது ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை யாருமே நிகழ்த்தாத சாதனையாகும். இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதும் பெற்றார். இந்நிலையில் வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் கோலி ‘கடந்த ஆண்டு சிராஜுக்கு சிறப்பாக அமையவில்லை. அதனால் ரசிகர்கள் அவரை அளவுக்கு மீறி விமர்சித்தார்கள். ஆனால் இந்த ஆண்டு அவர் கடுமையாக உழைத்து தன்னை நிருபித்துள்ளார்.’ எனக் கூறியுள்ளார்.