1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2024 (06:23 IST)

சூப்பர் ஓவரிலும் டை.. 2வது சூப்பர் ஓவரில் இந்தியா அசத்தல்.. 3-0 என்ற கணக்கில் தொடர் வெற்றி..!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் சமமான ரன்கள் அடித்ததால் சூப்பர் ஓவர் போடப்பட்டது. ஆனால் சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சமமான ரன்கள் எடுத்ததால் இரண்டாவது சூப்பர் ஓவர் போடப்பட்டது. அதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி  20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் அடித்தது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடிய சதம் அடித்தார். 
 
இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் அணியும் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் அடித்ததால் சூப்பர் ஓவர் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த சூப்பர் ஓவரில்  ஆப்கானிஸ்தான் 16 ரன்கள் அடித்த நிலையில் இந்தியாவும் 16 ரன்கள் அடித்ததால் டை ஆனது. 
 
இதனை அடுத்து இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்தியா 11 ரன்கள் அடிக்க  ஆப்கானிஸ்தான் 3 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே அடித்து இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. 
 
நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார் என்பதும்  தொடர் நாயகனாக  ஷிவம் துபே தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய வெற்றி காரணமாக இந்தியா 3-0  என்ற கணக்கில் முழுமையான வெற்றியை பெற்றது.
 
Edited by Siva