1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 1 செப்டம்பர் 2021 (16:31 IST)

ரமீஸ் ராஜா ஒரு பாகிஸ்ஹான் விரோதி… முன்னாள் பவுலர் கண்டனம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரமீஸ் ராசாவைக் கண்டித்து இம்ரான் கானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக இசான் மணி செயல்பட்டு வருகிறார். நாளையோடு அவரின் பதவிக் காலம் முடிய உள்ள நிலையில் அவருக்கு பதில் யார் தலைவர் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இசான் மணியும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராசாவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர். இதனால் ரமீஸ் ராஜா அடுத்த தலைவராக சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சர்பராஸ் நவாப் ரமீஸ் ராஜாவை பாகிஸ்தான் விரோதி என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய திட்டங்களுக்கு அடிபணிபவர் என்றும் அவரை நியமிப்பதை விட வெட்கங்கெட்ட செயல் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.