1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 4 ஜூன் 2021 (17:00 IST)

ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கு சம்பளம் கிடைக்காது! அதிரடி முடிவு!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடுபவர்களுக்கு மட்டுமே முழு சம்பளம் கிடைக்கும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் டி20 போட்டிகள் இந்தியாவில் தொடங்கப்பட்ட நிலையில் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்தியாவில் 29 போட்டிகள் நடந்து முடிந்திருந்த நிலையில் மீதம் உள்ள 31 போட்டிகளை கடந்த ஆண்டை போல அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த எஞ்சிய போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பது கடினம் என சொல்லப்படுகிறது. இதனால் போட்டிகளில் விளையாடுபவர்களுக்கு மட்டுமே முழு சம்பளம் வழங்கப்படும். போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கு அந்த போட்டிகளுக்கான சம்பளம் எல்லாம் கழித்துக் கொள்ள போவதாக சொல்லப்படுகிறது.