1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Ruby Trichy warriors vs Albert Tuti Patriots

டி.என்.பி.எல் கிரிக்கெட்: தூத்துக்குடி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Ruby Trichy warriors
டி.என்.பி.எல் என்று கூறப்படும் தமிழக பிரிமியர் கிரிக்கெட் போட்டிதொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய போட்டியில் ரூபி திருச்சி அணியும், ஆல்பர்ட் தூத்துக்குடி அணியும் மோதியது.



 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்து 18.5 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆல்பர்ட் தூத்துக்குடி அணி 15.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் குவித்து 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
தூத்துக்குடி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் காந்தி 49 மற்றும் 73 ரன்கள் எடுத்தனர். காந்தி ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார். இந்த வெற்றியால் தூத்துக்குடி அணியின் முதலித்தை பெற்றுள்ளனர்.
About Writer
sivalingam
அடுத்த கட்டுரையில்
எங்களுக்கும் ஐபிஎல் போட்டிகள் வேண்டும்; மித்தாலி ராஜ்